அந்தக் கோப்பையை நிறைத்துக் கொண்டிருக்கும்
தேநீரின் நிறமும் கதகதப்பும்
தான் எனக்கு தேவைப் படுகிறது!
அதன் கசப்புத்தன்மையைப் பிரித்தெடுத்து,
நனைந்த என் கூந்தல் இழையிலிருந்து
சொட்டும் மழை நீரில் கரைத்து,
அவன் கூட்டுக் கதவைத் தட்ட எத்தனிக்கிறேன்!
இந்த மழைநாளில் இப்படியொரு பரிசை
அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான்!
அவன் நாவின் சுவையுணர்த்தும் செல்களெல்லாம்
அந்த கசப்புதன்மையைத்
தக்கவைத்துக்கொள்ள வேண்டுகிறேன்!
இனி அவன் பருகும் ஒவ்வொரு மிடர் மழைநீரும்
என் காட்டுத்தனத்தையே பிரதிபலிக்கும்!
அந்த கசப்புத்தன்மை அவன் நாடிநரம்பெல்லாம்
பரவிப் பெருகி அமரத்துவம் அடைய,
இந்த ராட்சஷியின் கொடூரத்தை
நினைத்து நினைத்தே சாகட்டும்!
-நிவேதா
No comments:
Post a Comment