Friday 22 May 2015

மூளையின் மடிப்புகளில் புதையுண்ட ஒரு ஸ்வரத்தைத் தேடி பூமியின் மையத்திற்கு ஒரு பயணம்...


நரம்புகளற்ற அந்த வீணையின் குடம்
சுழலடிக்கின்ற அதிர்வை
எந்த ஸ்வரத்தில் சேர்ப்பேன் நான்!

பல நூற்றாண்டுகளாய்
மண்ணுக்குள் புதையிடிருந்த
மனித எலும்பினாலான புல்லாங்குழலையும்
தோண்டியெடுத்து இசைத்துப்பார்த்தாகி விட்டது!
இல்லை...அந்த ஸ்வரம் மட்டும் இல்லை...

அதன் ஒரு துளை,
என் மூளையைத் தொட்டுவிட்டு வந்த
மூச்சுக்காற்றில் அந்த அதிசய ஸ்வரத்தின்
சாயல் இருப்பதாகக் கூறியது.
இன்னொரு துளை,
அந்த சாயலைக் கழற்றிவிட்டு வருமாறு எச்சரித்தது.
ஒருவாறு முயன்றேன்...
மூன்றாவது துளை நடத்திய தேர்வில்
படுதொல்வியிய மிச்சம்!
நான்காவது துளைக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைந்தேன்...
ஐந்தும் ஆறும் உண்மையறிந்து கண்ணடித்துக் கொண்டன...
ஏழாவது துளை,
தன்னைப் பிரபஞ்சத்தின் ‘ப்ளாக் ஹோல்’ ஆக
பிரகடனப் படுத்திக் கொண்டது...
அதை என் சுண்டு விரலால் அடித்தேன்...
தன் விரதம் களைந்த ஆற்றாமையில்,
அக்குழல் என் விலா எழும்பினால் ஆனது
என்று அனுமந்த ஸ்தாயியில் அழுதது!
தோண்டியெடுத்த இடத்திலேயே புதைத்துவைத்து வந்தேன்!

அந்த வீணையில் அதே அதிச ஸ்வரம் கசிந்து கொண்டிருந்தது!

குடத்தில் ஏதோ கோளாறு என,
கையை விட்டுத் துழாவினேன்...
அதில் சிக்கியதேல்லாம் ‘ம்’ என்ற அவன் ஒற்றைச்சொல்லின்
வேறு வேறு பரிமாணங்களே!!!
அவற்றிடம் என் கேள்விகளை அடுக்கினேன்...
இயற்பியல் ஆய்வுக்கூடத்தில்
குழிப்பரிவுக் கருவியை அனுகச்சொல்லின!

தேடிச்சென்ற நான் அதனுள்ளேயே விழுந்துவிட்டேன்!
சீறிக்கொண்டு வந்த கோபத்தில்
என் சக்தியெல்லாம் திரட்டிக் கத்தினேன்!
அக்கருவி தன் காதுகளைப் பொத்திக்கொண்டு,
அந்த வீணையின் குடதிற்கே என்னை அனுப்பிவிட்டது!!!


மறுபடியும் அதே ஸ்வரம்...
என் மூளையைத் தனிமைப்படுத்த எண்ணி,
அதன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டேன்.
உந்துவிசை அடங்கிய கணத்தில்
அந்த ஸ்வரம் அனுதார ஸ்தாயியில் சிரித்து
என் சித்தத்தை சிதறடித்தது!!!

இன்றிலிருந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு
புதையுண்டு கிடைக்கப்போகும் இந்த வீணையில்,
என் நரம்புகள் முளைத்திருக்கும் என்றும்,
அதை நானே தோண்டியெடுத்து
இசைதுப்பார்பேன் என்றம் வெறித்தன
அவன் சாயலில் இருந்த அப்பூனையின் கண்கள்!!!
அப்போதாவது அந்த ஸ்வரத்தின்
மர்மம் மறையுமா எனச் சந்தேகித்தேன்...
கண்களை இறுக மூடிக்கொண்டது அப்போனை!
குடமெல்லாம் இருள்...
பூமிக்குள் புதைந்து கொண்டிருந்தது அந்த வீணை!

artissimo1.jpg
-நிவேதா




1 comment: