Monday 23 December 2013

சாளரம்

                        சாளரம்

திறந்தே  இருக்கட்டும்...
அடைத்திட வேண்டாம்...

கைபேசி கதிர்களிடமிருந்து தப்பித்த
ஒன்றிரண்டு அபூர்வ பறவைகள் நலம் விசாரிக்கக்கூடும்...

வஞ்சம் அறியாத பிள்ளைகளின் சுவசக்காற்றல் செலுத்தப்பட்ட
குமிழிகள் சில கவனத்தை ஈர்க்கக்கூடும்...

கற்காரை தரையில் விதையுண்டு அரும்பிய
பெயர் தெரியாத மலர்
பார்வையை வரவேற்கக்கூடும்...

புதிதாய் புலர்ந்த இளங்கீற்று
காரணம் அரியது வழியும் கண்ணீரை
 ஆவியாக்கி குளிரக்கூடும்...

பக்கத்துக்கு வீட்டிலிருந்து சமையல் மனம்
எதிர்வீட்டிலிருந்து விருப்பமான பாடல்
கூதர்காற்றினால் நகர்த்தப்பட்ட சருகுகளின் சலசலப்பு
வெளிச்சுவற்றில் ஊர்ந்து செல்லும் பல்லியின் சத்தம்  

அனைத்தும்...அனைத்தும்...
தனியறையின் நிசப்தத்தை குலைக்ககூடும்...

இருட்டறையின் சாளரம் ஏகாந்தத்தின் திறவுகோள் ...
திறந்தே இருக்கட்டும்...
அடைத்திட வேண்டாம்...
                                  -நிவேதா



No comments:

Post a Comment